எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய
Headlines
picasion
picasion
picasion
picasion
picasion
Published On: Friday, November 15, 2013

"அங்கத்துவ நாடுகளின் முடிவுகளை மதிக்கின்றோம்" - கமலேஷ் சர்மா!

இலங்­கையில் நடை­பெ­று­கின்ற பொது­ந­ல­வாய மாநாடு தொடர்பில் அங்­கத்­துவ நாடுகள் எவ்­வா­றான முடி­வு­களை எடுத்­தாலும் அவற்றை நாங்கள் மதிக்­கின்றோம் என்று பொது­ந­ல­வாய அமைப்பின் செய­லாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா தெரி­வித்தார்.ஜன­நா­யகம், மனித உரிமை, சட்­டத்தின் ஆட்­சி­ப­டுத்தல், அதி­காரப் பர­வ­லா­க்கம் உள்­ளிட்ட விட­யங்­களில் இலங்­கை­யுடன் இணைந்து செயற்­பட்­டு­வ­ருகின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்கை மனித உரிமை ஆணைக்­கு­ழுவை பலப்­ப­டுத்­தவும் அரச படை­யி­னரால் மேற்­கொள்­ள­ப்­பட்­ட­தாக கூறப்­படும் சித்­தி­ர­வ­தைகள் தொடர்பில் ஆராய பொது­ந­ல­வாய அமைப்பு இலங்­கை­யுடன் இணைந்து செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளினால் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு பதில் வெளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும் பொது­ந­ல­வாய அமைப்பின் செய­லாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோர் இணைந்து இந்த செய்­தி­யாளர் மாநாடு நடத்­தப்­பட்­டது.

செய்­தி­யாளர் மாநாட்டில் கமலேஷ் சர்மா தொடர்ந்து கருத்து வெளியி­டு­கையில்,

இலங்­கையில் நடை­பெ­று­கின்ற பொது­ந­ல­வாய மாநாடு விட­யத்தில் அங்­கத்­துவ நாடுகள் எவ்­வா­றான முடி­வு­களை எடுத்­தாலும் அவற்றை பொது­ந­ல­வாய அமைப்பு மதிக்­கின்­றது. நாடுகள் தமது பிர­தி­நி­தி­களை இங்கு அனுப்­பி­யுள்­ளது. எனவே பொது நல­வாய மாநாட்டின் இறு­தியில் சிறந்த வெளியீடு கிடைக்கும் என்று நம்­பு­கின்றோம் என்றார் அவர்.

நம்மவரின் குறும்படங்கள்

சிறப்புக் காணொளி

பொலிசாரின் அராஜகம்

இன்றைய 'இருப்பு'

make avatar

Sri Lanka Rupee Converter

how do i make a gif

இதுவரை வெளிவந்த இருக்கிறம் வார இதழ்கள்