Published On: Sunday, March 18, 2012
நெல்சிப் திட்டத்தின் கீழ் திறன் வளர்ப்புப் பயிற்சிப் பட்டறை
கிழக்கு மாகாணத்தில் நெல்சிப் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி மற்றும் களஆய்வு ஒன்று திருகோணமலை குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதற்கான வளவாளராக உலக வங்கியின் சிரேஸ்ட பொறியியல்துறை நிபுணர் ஆர். கே மல்கோத்ரா இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்தார்.
கட்டட நிர்மாணத்தில் தரக்கட்டுப்பாடு, கொங்கிறீட் தொழில்நுட்பம் என்பன தொடர்பான பரீட்சார்த்த கள ஆய்வும் பயிற்சியும் இடம்பெற்றது.
நெல்சிப் திட்டத்தின் கிழக்கு மாகாண திட்டப் பணிப்பாளர் எம் உதயகுமார், தகவல் கல்வி தொடர்பாடல் நிபு
ணரும் பொறியியலாளருமான ஏ.எம். கௌரிபாலன் உட்பட 50 க்கும் மேற்பட்ட திட்டக் குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.
திருமலை ராஜ்

இதற்கான வளவாளராக உலக வங்கியின் சிரேஸ்ட பொறியியல்துறை நிபுணர் ஆர். கே மல்கோத்ரா இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்தார்.
கட்டட நிர்மாணத்தில் தரக்கட்டுப்பாடு, கொங்கிறீட் தொழில்நுட்பம் என்பன தொடர்பான பரீட்சார்த்த கள ஆய்வும் பயிற்சியும் இடம்பெற்றது.
நெல்சிப் திட்டத்தின் கிழக்கு மாகாண திட்டப் பணிப்பாளர் எம் உதயகுமார், தகவல் கல்வி தொடர்பாடல் நிபு
ணரும் பொறியியலாளருமான ஏ.எம். கௌரிபாலன் உட்பட 50 க்கும் மேற்பட்ட திட்டக் குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.திருமலை ராஜ்

