Published On: Saturday, March 17, 2012
கிளிநொச்சியில் வெடிபொருள் வெடிப்பு! ஐந்து சிறுவர்கள் காயம்
கிளிநொச்சி செல்வநகர் பிரதேசத்தில் வெடிச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் 2.30 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஐந்து சிறுவர்கள் காயமடைந்ததாக இராணுவப் பேச்சாளர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார். காயமடைந்த சிறுவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த சிறுவர்கள் கைவிடப்பட்டிருந்த நிலையிலிருந்த பொருளொன்றை தீண்டியபொழுது அது வெடித்துள்ளமை இராணுவத்தினரும், பொலிஸாரும் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

