Published On: Saturday, March 17, 2012
மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகளும் இராணுவ உபகரணங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.வவுனியா மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இந்த உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஆர்.பீ.ஜீ. குண்டுகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகளும் அடங்கியுள்ளன.
அடையாளம் காணப்படாத ஆயுதங்களின் பாகங்களும் இதன்போது கைப்பற்றப் பட்டுள்ளன. பதவியா மற்றும் பாலம்பிட்டி ஆகிய பிரதேசங்களின் வரைபடங் களும் இந்த தேடுதலின்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.

