Published On: Saturday, March 17, 2012
மீண்டும் கொழும்பு- தூத்துக்குடி கப்பல் சேவை!
கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை தூத்துக்குடி துறைமுக தலைவர் சுப்பையா வெளியிட்டுள்ளார். இந்த கப்பல் சேவை இந்த மாத இறுதி பகுதியிலோ அல்லது அடுத்த மாத முதல் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப் பிட்டுள்ளார்.எவ்வாறாயினும் இந்த கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13ம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஏற்ற ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் முன் எடுக்கப்பட்டு வருவதாகவும் தூத்துக்குடி துறைமுக தலைவர் சுப்பையா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இராமேஸ்வரம் - தலைமன்னார் இடையேயான கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பான பரிசீலனையை இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

