Published On: Sunday, March 18, 2012
மாணிக்கக்கல் காணப்பட்ட பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு
மாணிக்ககல் இருப்பதாக இனம் காணப்பட்ட இரத்தினபுரி வெரலுவ பிரதேசத்திற்கு பொலி ஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள் ளது. குறித்த பகுதியில் மண் அகழ்வு நடவடிக்கை கள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாகவே இந்தத் தீர்மானம் மேற் கொள்ளப்பட்டதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி வெரலுவ பிரதேச பாதை புனரமைப்பின் போது இந்த மாணிக்கக் கல் இருக்கும் இடம் அடை யாளம் காணப்பட்ட தாக அவர்கள்தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் ஆயிரக் கணக்கான மக்கள் குறித்த பிரதேசத்தில் மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை மாணிக்கல் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட குறித்த பிரதேச த்திற்கு இரத்தினக்கல் தேசிய மாணிக்கக் கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை அதிகாரிகள் விஜயம் செய்துள்ளனர்.


