Published On: Sunday, March 18, 2012
முட்டை விலை வீழ்ச்சியடைந்ததால் திகாம்பரம் எம்.பி மீது முட்டைத் தாக்குதல்!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப் பினருமான பி.திகாம்பரம் மீது முட்டைத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.ஊவா மாகாண அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய தலை வர்களில் ஒருவருமான செந்தில் தொண்ட மானும் அவரது ஆதரவாளர்களும் பண்டார வளை நகரில் வைத்து முட்டைகளை வீசித் தாக்கியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்மீதான இந்தத் தாக்குதல் சம்பவத்தை திகாம்பரம் எம்.பி உறுதிப்படுத்தியுள்ளார்.
திகாம்பரம் எம்.பி பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகிக்கும் நிகழ்வு ஒன்றுக்காக பதுளை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இடையில் வாகனத்தை நிறுத்தி பண்டாரவளை நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்குச் சென்று உணவு உட்கொண்டிருந்தார். இதன்போது இப்பகுதிக்கு விரைந்த செந்தில் தொண்டமான் குழுவினர் முட்டைகளால் தாக்கியுள்ளனர்.

