Published On: Sunday, March 18, 2012
இருவேறு சம்பவங்களில் இருவர் பலி! 18.03.2012
தெல்தெனிய, அளுத்வத்தை பிரதேசத்தில் பஸ் ஒன்றின் மிதிப்பலகையிலிருந்து தவறி விழுந்த 78 வயதுடைய ஒருவர் உயிரிழந் துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர் கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.இதேவேளை கோனகங்ஆர பிரதேசத்தில் பஸ் மோதியதில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த சிறுவன் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந் துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

