Published On: Saturday, March 17, 2012
படை முகாம் அருகில் ஆணின் சடலம்! 17.03.2012
வீரவில விமானப்படை முகாமுக்கும் திறந்தவெளி சிறைச்சாலைக்கும் இடையிலான காட்டுப் பகுதி யிலிருந்து ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது. உயிரிழந்துள்ள நபரின் சைக்கிள் மற்றும் உடைகளும் அந்த இடத்திலிருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித் துள்ளார்.திஸ்ஸமகாராம சேனபுர பகுதியைச் சேர்ந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், இந்த நபர் காணாமல் போயுள்ளதாக அவரின் மனைவியினால் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சடலம் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக திஸ்ஸமகாராம பொலிஸார் விசாரணைகளை மேற்கொணடு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

