Published On: Saturday, March 17, 2012
பொலிஸ் உத்தியோகத்தர் கைது! 17.03.2012
கல்முனை பிரதேசத்தில் கனரக வாகனச் சாரதியொருவரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாளைவெட்டுவான் பொலிஸ் காவலரணில் நிறுத்தப்பட்ட வாகனத்தின் சாரதியிடம் சந்தேகநபர் இலஞ்சம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் நடவடிக்கை எடுக்காதி ருப்பதற்காக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் வினவியபோது இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக கல்முனை பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ள தாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

