எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய
Headlines
picasion
picasion
picasion
picasion
picasion

மண்டேலா இறுதிச் சடங்குகள் வரும் 15-ம் திகதி

தென்னாப்ரிக்காவிலும்,உலகெங்கும் பல கோடிக்கணக்கானோர், நெல்சன் மண்டேலாவின் மறைவு செய்தி கேட்டு, துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
ஜோஹனிஸ்பர்கில் அவரது இல்லத்துக்கு வெளியே ஏராளமான மக்கள் மெழுகுவர்த்திகளையும், மலர்களையும் வைத்துப் பிரார்த்தனைகளை இரவு முழுவதும் நடத்தினர்.
அவரது வாழ்க்கையைக் கொண்டாடும் வகையில் வேறு பலர், நிறவெறிக்கெதிரான போராட்டத்திலிருந்து பாடல்களைப் பாடி, நடனமாடினர். சிலர் தங்கள் சிறு குழந்தைகளுடன் வந்திருந்ததைக் காண முடிந்தது.
தென்னாப்ரிக்காவில் எல்லாக் கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கின்றன.

இறுதிச் சடங்குகள் 15-ம் திகதி

எதிர்வரும் 15-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அரச மரியாதையுடன் மண்டேலாவின் இறுதிச் சடங்கு நடக்கவுள்ளதாக தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா அறிவித்துள்ளார். 10 நாட்களுக்கு கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும்.
துக்க அனுஷ்டிப்புக் காலம் தென்னாப்ரிக்காவில் துவங்கிய நிலையில், தென்னாப்ரிக்காவின் அனைத்துப் பொது, அரசு கட்டிடங்கள் மற்றும் உலகெங்கும் உள்ள தென்னாப்ரிக்கத் தூதரகங்கள் அனைத்திலும், அஞ்சலிக் குறிப்புகளை மக்களும் பிரமுகர்களும் எழுத உதவும் வகையில், அஞ்சலிப் புத்தகங்கள் வைக்கப்படுகின்றன.
ஜோஹனஸ்பர்கின் புறநகர்ப்பகுதியில் உள்ள எப்.என்.பி அரங்கத்தில், தேசிய துக்கப் பிரார்த்தனை நிகழ்வு ஒன்று நடத்தப்படவிருக்கிறது.
அதன் பின்னர், பிரிட்டோரியாவில் மூன்று நாட்கள் நெல்சன் மண்டேலாவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.
நெல்சன் மண்டேலாவின் உடல் கிழக்கு கேப் பகுதியில் அவர் வளர்ந்த குனு கிராமத்தில் அரச மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படும்.

நெல்சன் மண்டேலா மரணமடைந்துவிட்டார்.

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னெஸ்பர்க்கில் அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது (95). அவர் மறைவுச் செய்தியை அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா அறிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் பேசிய ஜூமா: "தென் ஆப்பிரிக்க மக்களே, நமது அன்பிற்குரிய...ஜனநாயக தென் ஆப்ரிக்காவிற்கு வித்திட்ட அதிபர், நம்மை விட்டு பிரிந்தார். நமது தேசம் தனது மிகப் பெரிய பிள்ளையை இழந்து விட்டது. மக்கள் தங்கள் தந்தையை இழந்துவிட்டனர்". என்றார்.
மண்டேலாவின் இறுதிச் சடங்கு முடியும் வரை நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப் படும் என அவர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாகவே நெல்சன் மண்டேலா உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.
மண்டேலாவின் மறைவிற்கு ஐ.நா. பொது செயலாளர் பான்-கி-மூன் ,அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் அழியும் நிலையில் கார்த்திகை பூக்கள்!

தமிழ் மக்களுக்கு குறிப்பாக இந்துக்களுக்குச் சிறப்பான மாதம் கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் மட்டுமே கார்த்திகைப் பூவும் மலர்ந்து விரிந்து பலரையும் வியக்க வைக்கும் மனதைக் கொள்ளை கொள்ளும்.

தற்போது வன்னியிலும் குடாநாட்டிலும் ஆங்காங்கே கார்த்திகைப் பூக்கள் மலர்ந்து அனைவரையும் கவர்ந்துள்ளன.  கார்த்திகைப் பிறையைக் கண்டவர்கள் போன்று கார்த்திகைப் பூவைக் கண்ணுற்றவர்களும் தம் வாழ்வில் வசந்தம் வீசப்போகிறது என்ற நம்பிக்கையுடன் மகிழ்ச்சியில் திளைத்து நிற்கின்றனர்.

ஆனால் விடுதலைப்புலிகள் கார்த்திகை பூக்களை தேசிய மலர்களாக அறிவித்ததால் மாவீரர் நாளில் அம்மலரையும்

முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வடமராட்சி கிழக்கு உட்பட வன்னிப்பிரதேசங்களிலேயே கார்த்திகை பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்களில் மழைக்காலம் ஆரம்பித்ததும் மரங்களிலும் வேலிகளிலும் படரும்.

தற்போது மாவீரர்நாள் ஆரம்பமாகியிருப்பதால் வன்னி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதியில் கார்த்திகை கொடிகளை தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டு வேலிகளில் படர்ந்திருக்கும் கார்த்திகை கொடிகளையும் அழித்து விடுமாறு இராணுவத்தினர் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.  கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரும் விநாயகர் விரதம், திருவெம்பாவை பூசைகளுக்கும் இந்த மலர்கள் பயன் படுத்தப்படுவது வழக்கமாகும்.

எனினும் இராணுவத்தினரின் கெடுபிடிகளால் கார்த்திகை மலர்களும் வடக்கு கிழக்கிலிருந்து அழிந்து போகும் அவலம் ஏற்பட்டுள்ளது. தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் வன்னியில்  படையினர் ஈடுபட்டுள்ளனர்.


பேரறிவாளனிடம் பெற்ற வாக்குமூலத்தை நான் மாற்றி அமைத்தேன்:சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் ஒப்புதல்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி  கொலை வழக்கு விசாரணை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனிடம் நான் வாக்குமூலத்தை பதிவு செய்து. பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை சேர்த்து கொண்டேன். இதற்காக நான் வருந்துகிறேன். என சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன்தான் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
9 வோல்ட் திறன் கொண்ட 2 கோல்டன் பவர் பேட்டரிகளை வாங்கி, சிவராசனிடம் கொடுத்தேன். அவற்றை வெடிகுண்டுகளில் சிவராசன் பயன்படுத்தினார் என்று பேரறிவாளன் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.ஆனால், தான் வாங்கிய பேட்டரி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டில் பயன்படுத்தப்பட உள்ளது என்பது தெரியும் என்று பேரறிவாளன் கூறவே இல்லை.
அவரிடம் வாக்குமூலம் பெற்ற போது, ‘நான் பேட்டரியை வாங்கி கொடுத்தது உண்மை. ஆனால், எதற்காக சிவராசன் அதை கேட்டார் என்று தெரியவில்லை என்றுதான் பேரறிவாளன் கூறினார்.ஒரு விசாரணை அதிகாரி என்ற முறையில், பேரறிவாளனின் வாக்குமூலம் என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது தகுதியான வாக்குமூலம் அல்ல. அதாவது அவரது ஒப்புதல் இல்லாமல், சதி திட்டம் அரங்கேறியதாகதான் இதில் அர்த்தம் கொள்ளப்படும்.இதனால், பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை சேர்த்து கொண்டேன். இதற்காக நான் வருந்துகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், அதை நிச்சயம் மாற்றி இருந்திருப்பேன்.
கடந்த 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி காலை 11.30 மணி அளவில் பேரறிவாளனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பேரறிவாளன் வாக்குமூலம் கொடுத்த பின்னர், எனக்கு 2 வாய்ப்புகள்தான் இருந்தன.அவரது வாக்குமூலத்தை அப்படியே ஏற்பது அல்லது பிற ஆதாரங்கள் அடிப்படையில் என்னுடைய அனுமானத்தை அதில் பதிவு செய்வது. அதனால் வேறு வழியின்றி 2வது வாய்ப்பை தேர்ந்தெடுத்தேன்.
வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், பேரறிவாளன் வாக்குமூலம் தகுதியானதாக இல்லாவிட்டால் அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும். 22 ஆண்டுகளுக்கு பின்னர் என் செயலுக்காக வருந்துவதற்கு காரணம், இப்போது இல்லாவிட்டால் எப்போதும் முடியாது என்பதால்தான்.
ராஜிவ் கொலை வழக்கு விசாரணை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனிடம் நான் வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டேன். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.துரதிருஷ்டவசமாக ராஜிவ் கொலை வழக்கில் வெடிகுண்டு யாரால், எங்கு தயாரிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை சிபிஐயால் கண்டுபிடிக்க முடியவில்லை.இவ்வாறு தியாகராஜன் கூறியுள்ளார்.

புதிய அதிவேக பாதைகள் அமைக்க அரசு தீவிரம்

இலங்கையின் வடக்குப் பகுதிக்கான அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என  அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்படும் இந்த வீதியின் முதல் கட்டப் பணிகள் ஹெண்டரமுல்லையில் இருந்து மீரிகம வரை நிர்மாணிக்கப்படும். இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் குருணாகலில் இருந்து நிர்மாணிக்கப்பட உள்ளதுடன், மூன்றாம் கட்டம் பணிகள் மீரிகமவில் இருந்து கண்டி வரை நிர்மாணிக்கப்படும். 4 ஆம் கட்ட நிர்மாணப் பணிகள் குருணாகலில் இருந்து தம்புள்ளை வரை நிர்மாணிக்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்தார். அதேவேளை யாழ் - கொழும்பிற்கான அதிவேக பாதை அமைக்கும் பணிகளும் விரையி் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இப் பாதை அமைப்புப் பணிகளிற்கான நிதி உதவிகளை சீன அரசு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மகிந்த சிந்தனை அரசியல் நோக்கங்களுக்காக இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது - முதலமைச்சர்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடமாகாண சபையினரும் புறக்கணித்திருந்த நிலையில் அந்தக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் ஜனாதிபதி நியமித்திருக்கின்றார்.
அதற்கான கடிதம் ஒன்று தமக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்து கிடைத்திருக்கின்றது என்பதை முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் ஒருங்கிணப்பு குழுக் கூட்டம் முதலமைச்சரின் தலைமையில் நடைபெற வேண்டிய நிலையில், மகிந்த சிந்தனை என்ற அரசியல் நோக்கங்களுக்காக இந்த இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

தனது தாயின் சமாதியை பார்க்கப் போனதால்தான் ஜெயபாலன் கைதானார் - அவரது மனைவி வாசுகி

தனது தாயின் சமாதியைப் பார்க்கப்போனதால்தான் கவிஞர் ஜெயபாலன் இலங்கையில் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக அவரது மனைவி வாசுகி கூறியுள்ளார்.
அவரது கைதுக்காக இலங்கை அரசாங்கம் வேறு காரணங்களைக் கூறினாலும், தனது வீட்டில் உள்ள தனது தாயின் சமாதியைப் பார்க்க்போனதற்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக வாசுகி வலியுறுத்தியுள்ளார்.
அவர்களது வீடு இருக்கும் இடம் பாதுகாப்பு வலயமா? அங்கு செல்வதற்கு மட்டுப்பாடு ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டதற்கு பதிலளித்த நோர்வேயில் உள்ள வாசுகி அவர்கள், மக்களுடைய வீடுகளை அரசாங்கம் ஆக்கிரமித்து, குந்தி இருப்பது வந்து... எங்களுடைய காணிக்குள் நாங்கள் போவது என்ன குறை?'' என்று பதிலளித்தார்.
தன்னுடைய கணவர் இலங்கையில் இனவிரோதத்துக்கு குந்தகமாக எதுவும் அங்கு பேசவில்லை என்றும் வாசுகி கூறினார்.

நம்மவரின் குறும்படங்கள்

சிறப்புக் காணொளி

பொலிசாரின் அராஜகம்

இன்றைய 'இருப்பு'

make avatar

Sri Lanka Rupee Converter

how do i make a gif

இதுவரை வெளிவந்த இருக்கிறம் வார இதழ்கள்