எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய
Headlines
picasion
picasion
picasion
picasion
picasion
Published On: Saturday, November 16, 2013

பிரித்தானிய பிரதமர் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார் – முரளீதரன்

யுத்தத்தின் பின்னர் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் குறைவாகவே மதிப்பீடு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். 

வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

நான் விளையாட்டு வீரன் அரசியல் பற்றி அவ்வளவாக நினைப்பதில்லை என முரளிதரன் குறிப்பிட்டார். 

எனினும் கடந்த 30 வருடங்களாக வடக்கில் பிரச்சினை உள்ளது என்பது தெரியும், அங்கு எவரும் சென்று வர முடியாது என்பது தெரியும். யுத்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையுடன் சென்று அங்குள்ள நிலைமைகளை அறிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

எனினும் இன்று சாதாரணமாக அங்கு சென்று வர முடியும். அந்தப் பகுதிகள் 1000 வீதம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளதென முரளிதரன் கூறினார். 

பிரித்தானிய பிரதமர் சரியா அல்லது பிழையா என தன்னால் கூறமுடியாத என குறிப்பிட்ட முரளி, அவர் வடக்கு பற்றி தெரிந்திருக்கவில்லை, பிரித்தானியாவில் இருந்து வந்து நேற்று மட்டுமே அங்கு சென்று பார்வையிட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். 

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளவந்த டேவிட் கெமருன் இன்று முரளிதரனை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நம்மவரின் குறும்படங்கள்

சிறப்புக் காணொளி

பொலிசாரின் அராஜகம்

இன்றைய 'இருப்பு'

make avatar

Sri Lanka Rupee Converter

how do i make a gif

இதுவரை வெளிவந்த இருக்கிறம் வார இதழ்கள்