Published On: Thursday, November 14, 2013
என் அண்ணாவ தாங்க - கதறி அழும் சிறுமி - அண்ணன் எங்கே???
பொதுநலவாய மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில் கனளயீ்ப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் மதவாச்சியில் இடைமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் வவுனியா நகரசபை மைதானத்தில் ஒன்றுகூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் வவுனியாவிலும் மன்னாரில் இருந்து வந்தவர்கள் மடுவிலும் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் காணமல் போன தங்கள் உறவினர்களை மீட்டுத்தருமாறு கதறி அழுக்கிறனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் தனது அண்ணனைத் தொலைத்த சிறுமி ஒருத்தி கதறி அழுகின்ற காட்சி பார்ப்பவர் நெஞ்சங்களை உருக்குகிறது.
நவனீதம்பிள்ளை அம்மையார் யாழ்ப்பாணம் வந்தபோது யாழ் பொது நூல் நிலையம் முன்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி இந்த சிறுமி " என் அண்ணாவ தாங்க " என்று கதறி அழுத போது போது தைப் பார்த்தவர்கள் தங்களை அறியாமல் கண்ணீர் சிந்தினர்.
அதே சிறுமி இன்றும் வவுனியா நகர சபை மைதானத்தில் அண்ணா வேணும் என்று கதறி அழுதாள் ஏனோ தெரியவில்லை இந்த சிறுமியின் கதறல் என்னை ரொம்ப பாதித்து விட்டது



